25 688e34be181e1
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Share

மட்டக்களப்பு-வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(2) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான 4 பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் இராமலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானை குறித்த நபரை தாக்கியுள்ளது.

இதனையடுத்து, அவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

காட்டுயானை தமது வீட்டிற்குள் வந்து அட்டகாசம் செலுத்திய வேளை தமது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள்ளிருந்து வெளியேறிய நிலையில் அவர் இவ்வாறு பரிதாபகரமான முறையில் காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளாதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...