10 7
இலங்கைசெய்திகள்

கனடா செல்ல ஆசைப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி

Share

கனடாவில் வேலை பெற்று தருவதாக கூறி, இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இடைத்தரகரான தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பியகம பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களிடமிருந்து 5.5 மில்லியன் ரூபாயைப் பெற்று வைத்திருந்ததாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர் பியகம பகுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபர் பியகம பகுதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இடைத்தரகராக செயற்பட்டு பண மோசடி செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் பெப்ரவரி மாதம் மாவனெல்ல பகுதியில் நபரிடம் 300000 ரூபாயையும், மற்றொரு நபரிடம் 250,000 ரூபாயையும் மோசடி செய்துள்ளார்.

சந்தேக நபர் அரநாயக்க பகுதியில் சிறிது காலம் வசித்து வந்தபோது அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று, பின்னர் திஸ்ஸமஹாராம பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 65 வயதுடையவர் எனவும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் அஜித் விஜேசிங்கேவின் அறிவுறுத்தலின் பேரில், பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...