இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

24 1
Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க விமான நிலைய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாத்தறை, துடாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து நேற்று காலை 7.48 மணிக்கு Fly டுபாய் விமானமான FZ-579 மூலம் டுபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளின் ஒரு தொகையையும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான விஸ்கி போத்தல் ஒரு தொகையையும் அவர் தனது பொதிகளில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

அவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது, ​​அவர் விஸ்கி போத்தல்களை தரையில் வீசி எறிந்ததாகவும், சுங்க அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...