இலங்கைசெய்திகள்

இந்திய – இலங்கை தரைவழிப்பாதை குறித்து கவலை வெளியிட்டுள்ள மல்வத்த மகாநாயக்கர்

Share
20 15
Share

இந்திய – இலங்கை தரைவழிப்பாதை குறித்து கவலை வெளியிட்டுள்ள மல்வத்த மகாநாயக்கர்

இந்தியாவுக்கும் இடையிலான உத்தேச இணைப்பு வீதி நிர்மாணிக்கப்படும் போது, ஏற்படும் பாதுகாப்பு கரிசனை தொடர்பில் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்போடுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நேற்று(20) மல்வத்த விகாரையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே தேரர், தமது கவலையை வெளியிட்டுள்ளார்.

உத்தேச வீதியின் ஊடாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு இலங்கையில் உற்பத்திகள் எதுவும் இல்லை ஆனால் பெருமளவிலான கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படும் அச்சுறுத்தலை இலங்கை எதிர்கொள்ளும் எனவும் சுமங்கல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த திட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும், திட்டத்தின் திட்டமிடல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களுக்கு குறைந்தது இரண்டு வருடங்கள் செல்லும் எனவும் உயர்ஸ்தானிகர் விளக்கமளித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த திட்டம் இலங்கைக்கு பாதகமானது என்ற தவறான கருத்தையும் அவர் மறுத்துள்ளார்.

இதேவேளை, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதா என தேரர் எழுப்பிய கேள்விக்கு, திட்டம் தற்போது பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் எப்போதும் பிரதான நுழைவாயிலைப் பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் ரகசிய அணுகலைப் பயன்படுத்துவார்கள் என்பதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும், பௌத்த வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்கும் மின்சாரம் மற்றும் எரிசக்திக்கான செலவினங்களைக் குறைப்பதற்கும் இந்தியப் பிரதமர் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், இலங்கையில் எந்தவொரு ஜனாதிபதி அல்லது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு தனது ஒத்துழைப்பை வழங்க இந்திய அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

Share
Related Articles
11 7
இலங்கைசெய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் எதிரொலி! அநுர கட்சியின் அதிரடி அறிவிப்பு

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்காது என மக்கள்...

2 17
இலங்கைசெய்திகள்

கண்டி மாவட்ட முடிவுகள் வெளியாகின..! தேசிய மக்கள் சக்தி முன்னிலை

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

10 8
இலங்கைசெய்திகள்

சிறந்த பாடத்தை கற்பித்த தேர்தல் : ரணிலை குறி வைத்து வெளியாகியுள்ள விமர்சனம்

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று ஜனநாயக...

8 8
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் என கூறி மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை...