body scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாடிகானுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

Share

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி நகரில் வீதியோர வாடிகானுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

எனினும், சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மதுரங்குளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி பகுதியில் டீசல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுதப்பட்டுள்ள நிலையில் அதனை அண்டிய வடிகானுக்குள் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வடிகானுக்குள் சடலம் ஒன்று கிடப்பதாக மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மதுரங்குளிப் பொலிஸார், விசாரனைகளை ஆரம்பித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர், டீசல் கொள்வனவு செய்ய வந்தவரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை தடத்தினர்.

அத்துடன், நீதிவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தடயவியல் பிரிவினருடன் இணைந்து மதுரங்குளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...