tamilni 278 scaled
இலங்கைசெய்திகள்

அதிரடியாக தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்

Share

அதிரடியாக தோஹாவுக்கு நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்

இலங்கை கடவுச்சீட்டுடன் நாட்டிற்குள் பிரவேசிக்க முற்பட்ட மலேசியர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர்.

மலேசிய நாட்டவரான 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு அதே விமானத்தில் தோஹாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அபுதாபியில் திருகோணமலை பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவருக்கு தரகர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் விமான அனுமதி மற்றும் விசாவை வழங்கியுள்ளார்.

அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கை இளைஞர் அன்றைய தினம் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்ற நிலையில்,பின்னர், இலங்கை இளைஞரிடமிருந்து இலங்கை கடவுச்சீட்டை குறித்த மலேசியர் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இலங்கை கொழும்பில் உள்ள மலேசிய தூதரகத்தினை தொடர்புகொண்டு தனது கடவுச்சீட்டு தொலைந்துவிட்டதாக அறிவித்து, புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 09/19 மாலை தோஹாவிலிருந்து கட்டுநாயக்கவிற்கு QRR-யில் விமானம் மூலம் வருகை தந்துள்ளார்.

நாட்டிற்குள் நுழைவதற்குத் தேவையான அனுமதிப் பணிகளை மேற்கொண்ட போது அவரது மொழி உச்சரிப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

இதற்கமைய, மலேசியரை கைது செய்த கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள், அவர் வந்த அதே கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் மீண்டும் தோஹாவுக்கு நாடு கடத்தப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...