24 66a79f4a0e23c
இலங்கை

மலேசியாவில் தமிழர்களின் வரலாறு மற்றும் எண்ணிக்கை

Share

மலேசியாவில் தமிழர்களின் வரலாறு மற்றும் எண்ணிக்கை

ஆசிய நாடான மலேசியாவில் தமிழர்கள் வரலாறு குறித்து இங்கே காண்போம். தமிழர்கள் அதிக வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.

மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 3.39 கோடி (2022) ஆகும். இதில் தமிழர்கள் 6.7 சதவீதம் பேர் ஆவர். அதாவது 23, 27,000 தமிழர்கள் மலேசியாவில் வசித்து வருகின்றனர்.

1800களில் மலேசியாவிற்கு தொழிலாளர்களின் பாரிய இயக்கத்திற்கு முன், அங்கு இந்திய குடியேற்றங்கள் பெரும்பாலும் வணிகத்தை கொண்டிருந்தன.

குறிப்பாக, காலனித்துவ ஆட்சியின்போது தமிழ்த் தொழிலாளர்கள் பாரிய அளவில் இடம்பெயர்ந்தனர். ஆரம்பத்தில் தமிழர்கள் சாலைகள், ரயில் பாதைகள் அல்லது தேயிலை தோட்டங்களில் வேலை பார்க்க வரவழைக்கப்பட்டனர். பின்னாளில் படிப்படியாக அவர்கள் நிரந்தர குடியேறிகளாக மாறினர்.

அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களின் கொள்கையால் தமிழ்நாட்டு கிராமம் மலாயாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மலாயாவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் தமிழ் பேசும் மக்களே ஆவர்.

எனினும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பல்கலைக்கழக கல்வியறிவு பெற்றவர்களாக இந்தியர்கள் வந்தனர்.

இன்று மலேசிய தமிழர்கள் சமூகங்களும் பெருமையுடன் தங்கள் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், மொழி மற்றும் மதங்களைப் பின்பற்றுகின்றனர்.

தமிழர்கள் மலேசியாவின் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் உடல் உழைப்பு தொழிலாளர்களாகவே உள்ளனர்.

இந்து மதத்தை தழுவியவர்களாக பெரும்பாலும் மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள், இந்தியாவில் நடைமுறையில் உள்ள அசல் தைப்பூசத் திருவிழாவை விட வித்தியாசமான முறையில் கொண்டாடுகிறார்கள்.

Share
தொடர்புடையது
Kandy
செய்திகள்இலங்கை

கண்டி – கீழ் கடுகண்ணாவ மண் சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; வீதி மறு அறிவித்தல் வரை மூடல்!

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக...

Aswasuma Welfare benifits Board 1200px 2023 07 11 1000x600 1
செய்திகள்இலங்கை

அஸ்வெசும’ பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கின்மையால் சலுகைகள் கிடைக்கவில்லை – கணக்காய்வு அறிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான...

ticket scaled 1
செய்திகள்இலங்கை

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்கிரமசிங்க நிதி மோசடி வழக்கு: பிரித்தானியாவில் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணைத் தீவிரம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம்...