14 13
இலங்கைசெய்திகள்

சூடு பிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Share

சூடு பிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ள நிலையில் தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் பல முக்கிய அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சி தாவல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து பிரதான கட்சி மட்டத்தில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கட்சி மாறுதலுக்காக இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அதிக அனுகூலங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

அண்மையாக கருத்துக்கணிப்புகளுக்கு அமைய வயதானவர்களின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஏனைய வயதினர் சஜித் மற்றும் அனுரவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகிறார்.

இதன் காரணமாக தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...