10 26
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருத்தப்படவுள்ள முக்கிய அரச கட்டடங்கள்

Share

இலங்கையின் மிகவும் முக்கியமான மூன்று அரச கட்டடங்களுக்கு, திருத்தப்பணிகள் அவசியம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற வளாகம், காலி முகத்திடலில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடம் அதாவது தற்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பு 7 இல் உள்ள சுதந்திர சதுக்கம் என்பனவே அவையாகும்.

இந்த கட்டடங்களுக்கு, பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள் தேவைப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான அதிகாரிகள், ஏற்கனவே மதிப்பீடு மற்றும் வடிவமைப்பு அறிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பித்துள்ளனர், இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தை மட்டும் புதுப்பிப்பதற்கு சுமார் 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது.

கூரையில் நீர் கசிவு காரணமாக நாடாளுமன்ற கட்டிட சுவர்கள் மற்றும் தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்குள், கட்டம் கட்டமாக, மேற்கொள்ளும் வகையில், புதுப்பிக்கும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...