26 2
இலங்கைசெய்திகள்

மோசமான வரலாற்று சாதனையை பதிவு செய்த மைத்திரி

Share

மோசமான வரலாற்று சாதனையை பதிவு செய்த மைத்திரி

மக்களின் மனித உரிமைகளை மீறியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 103 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டியுள்ளதாக பிரித்தானிய வானொலியான பிபிசி தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, மனித உரிமைகளை மீறியதற்காக அதிக முறை தண்டிக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி என்ற சாதனையை மைத்திரிபால சிறிசேன மட்டுமே படைத்துள்ளார்.

இதுபோன்ற 3 வழக்குகளில், 2 வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட அவருக்கு103 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில், சட்டவிரோதமாக நாடாளுமன்றத்தை கலைத்த வழக்கு, ஈஸ்டர் தாக்குதல் வழக்கு மற்றும் ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மன்னிப்பு வழங்கிய வழக்கு ஆகிய மூன்று வழக்குகளில் இரண்டில் இந்த இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

Share
தொடர்புடையது
17 10
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்டவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி மோசடி: பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ள ஒருவரின் வங்கி அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி, 6...

16 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பராமரிப்பு நிலையத்தில் சோகம்: குளத்தில் விழுந்து 18 மாதக் குழந்தை உயிரிழப்பு!

மெதமுலன, கதமடித்த பகுதியில் உள்ள பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில், 18 மாதக் குழந்தை ஒன்று...

15 10
செய்திகள்இலங்கைஉலகம்

போலி காணொளிகளைத் தடுக்க புதிய கருவி: யூடியூப்பின் அதிரடி நடவடிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான காணொளிகள் மற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfakes) தொடர்பான...

14 10
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: ஐநா பாதுகாப்பு சபையின் மௌனத்தை விமர்சித்த அமீர்-சயீத் இரவானி!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் இராணுவத் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய...