images 7
இலங்கைசெய்திகள்

கட்சியையும் நாட்டையும் அழித்த மைத்திரிக்கு பைத்தியம்: சந்திரிக்கா கடும் தாக்கு

Share

கட்சியையும் நாட்டையும் அழித்த மைத்திரிக்கு பைத்தியம்: சந்திரிக்கா கடும் தாக்கு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை (Sri Lanka Freedom Party) நிரந்தரமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை (Nimal Siripala de Silva) பதில் தலைவராக நியமிக்க நடவடிக்கை எடுத்ததாக அக்கட்சியின் புரவலர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் (08) கலந்து கொண்ட முன்னாள் அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) 2015ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்றதன் பின்னர் கட்சியையும் நாட்டையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் பொதுச் செயலாளர் மைத்திரிபால பெரும் எதிர்பார்ப்புடன் வேண்டாம் என்று கூறினார்.

மைத்திரிபால சிறிசேன கட்சி அரசியலமைப்பை முற்றாகக் குழப்பிவிட்டார். நான் நீக்கப்பட்டதாகவும், மீண்டும் நீக்கவில்லை என்றும் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவர் உண்மையிலேயே பைத்தியம்தான் என முன்னாள்அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...