புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர் இன்று (26) சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளது.
இந்தநிலையிலேயே, அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.