மஹிந்த நாமல்
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகமாட்டார் மஹிந்த! – நாமல் அறிவிப்பு

Share

“பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்சவே தொடர்ந்து நீடிப்பார். பிரதமர் பதவிக்கு நான் நியமிக்கப்படவுள்ளேன் என்று வெளியான தகவல் வதந்தியாகும்.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகுவது குறித்து பரிசீலித்து வருகின்றார் எனவும், புதிய பிரதமராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நாமல் எம்.பியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“விரைவில் பொருளாதார நிலைமைகள் மீளவும் கட்டமைக்கப்பட்டு அரசியல் நிலைமைகளும் சுமுகமாக்கப்படும். ஜனாதிபதி அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளார்.

என்னைப் பொறுத்தவரையில் புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்குக்கூட கிடையாது” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 691b58dca001e
செய்திகள்அரசியல்இலங்கை

பசில் ராஜபக்சவுக்கு நவ. 21இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு: அமெரிக்காவில் சிகிச்சையிலுள்ளவர் திரும்புவாரா என்ற சந்தேகம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ரூ. 50 மில்லியன்...

25 691be54fdfdbd
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விகாரை அகற்றப்பட்டதைக் கண்டித்து அமரபுர மகா நிக்காய தலைமை தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்!

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க...

Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...