மஹிந்த மீண்டும் வருவார்!! – கூறுகிறார் ஹேரத்

278885233 5009761925739309 4219216527967576000 n

மக்கள் கோரிக்கை விடுத்தால், மஹிந்த ராஜபக்ச மீண்டும் வருவார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார். எனினும், மக்கள் அவரை மீள அழைத்தனர். அவரும் வந்து, ஆட்சியை பிடித்தார். எனவே, மக்கள் கோரினால் அவர் மீண்டும் வருவார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் ஆதரவு வழங்குவோம். தற்போதைய சூழ்நிலையில் இணைந்து பயணிப்பதுதான் சிறப்பு.” -என்றும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version