mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மஹிந்த யாழ். விஜயம்! – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார்

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார்.

இதன்போது யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் அவர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அதன்படி நாவற்குழி, ஆரியகுளம், கந்தரோடை, நயினாதீவுப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் பிரதமர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தையும் அவர் தரிசிக்கவுள்ளார்.

இதேவேளை, தென்மராட்சி – மட்டுவில் வண்ணத்திப் பாலத்துக்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிரதமரால் திறந்துவைக்கப்படவுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டு பொருளாதார மத்திய நிலையத்தையும், வர்த்தகத் தொகுதிகளையும் திறந்துவைக்கவுள்ளார்.

மாவட்ட விவசாய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக 30 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையத் தொகுதிகள் மத்திய நிலையத்துடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளன.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...