முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது உண்மைதான் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவே முன்னாள் பிரதமர் திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அலரி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்ததால் முன்னாள் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்தே மஹிந்த ராஜபக்ச திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்துக்கு மாற்றப்படுவார்” – என்றார்.
#SriLankaNews
Leave a comment