உடைந்ததது பெரமுன! திணறும் மகிந்த தரப்பு
இலங்கைசெய்திகள்

உடைந்ததது பெரமுன! திணறும் மகிந்த தரப்பு

Share

உடைந்ததது பெரமுன! திணறும் மகிந்த தரப்பு

அரசாங்கத்தில் பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் குழு புதிய அரசியல் சக்தியொன்றை உருவாக்குவது தொடர்பில் இறுதிக்கட்ட கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த குழு கடந்த சில மாதங்களில் அவ்வப் போது கூடி புதிய வேலைத்திட்டம் குறித்து கலந்து ரையாடியது.
அந்த பேச்சுகள் நிறைவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் புதிய அணிக்கு பெயரொன்றை தெரிவு செய்யும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதாக தெரிகிறது.

புதிய கூட்டணியின் அரசியல் கொள்கை,அதன் வகிபாகங்கள் குறித்து சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் முக்கிய சந்திப்பொன்றும் நடந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே டலஸ் அணி , விமல் அணி என பிரிந்து சென்றுள்ள நிலையில் எஞ்சியுள்ள இளவயது எம்.பிக்களும் புதிய கூட்டணி தொடர்பில் செயற்பட ஆரம்பித்திருப்பது அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக் கியுள்ளதாக அறியமுடிகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...