அருந்திக்க பெர்னாண்டோ
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த பதவி விலக வேண்டும்! – கோட்டாவிடம் ‘மொட்டு’ எம்.பிக்கள் வலியுறுத்து

Share

பிரதமர் மஹிந்த உள்ளிட்ட அரசு பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்து, பிரதமர் மற்றும் அரசு பதவி விலக வேண்டும் என்று இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற அமைச்சர்ள், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

அதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது அரசோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து தான் பதவி விலகப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...