2 38
இலங்கைசெய்திகள்

சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் – இரகசிய சந்திப்பில் ரணில், மகிந்த

Share

சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் – இரகசிய சந்திப்பில் ரணில், மகிந்த

இலங்கை அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பலகட்ட இரகசிய சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் வெளியிடப்படாமல் இரகசியமாக தகவல் பேணப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றியிருந்தது.

எனினும் மக்கள் புரட்சியால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரட்டப்பட்ட பின்னர், கட்சியின் உள்ளக மோதல்கள் தீவிரம் அடைந்திருந்திருந்தன.

இந்நிலையில் தம் கட்சியை பாதுகாக்கும் நோக்கில் களமிறங்கப்பட்ட சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், அந்தக் கட்சியே இல்லாமல் போகும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.

கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்றைய சந்திப்பு மிகவும் முக்கியமானதாக அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 10
செய்திகள்இந்தியா

டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி...

1762783393 Namal Rajapaksa SLFP Sri Lanka Ada Derana 6
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நாமல் ராஜபக்ஷ: 10 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை – அரசியல் கூட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கட்சியின்...

25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...