2 16 scaled
இலங்கைசெய்திகள்

சீனாவிற்கு பறந்த மகிந்த ராஜபக்ச!

Share

சீனாவிற்கு பறந்த மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச நேற்று(27.06.2024) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பெய்ஜிங்கில்(Beijing) அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரிலே முன்னாள் ஜனாதிபதி சீனாவுக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர், சீன பிரதமர் லீ கியாங்(Li Qiang) மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ(Wang Yi ) ஆகியோருடன் அங்கு தங்கியிருக்கும் போது கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் லீ கியாங் மற்றும் அமைச்சர் யீ ஆகியோருடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம், பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் மற்றும் இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மகிந்த ராஜபக்ச கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நினைவு நிகழ்வுகளில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங், வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் முன்னணி சிபிசி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிங்கப்பூர் வழியாக பெய்ஜிங் சென்ற ராஜபக்ச, ஜூலை 1ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...