24 660b76fad5e82
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலின் சூழ்ச்சியில் மகிந்தவை காய்வெட்டும் முக்கிய அரசியல்வாதிகள்

Share

ரணிலின் சூழ்ச்சியில் மகிந்தவை காய்வெட்டும் முக்கிய அரசியல்வாதிகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் நோக்கில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சிலர் கட்சியை விட்டு விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கமைய, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன, பிரமித பண்டார தென்னகோன் உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் குழுவொன்று பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது கட்சி வேறுபாடின்றி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இந்தக் குழுவினருக்கும் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி, இந்தக் குழு ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாடல் நடவடிக்கை மஹிந்தானந்த அளுத்கமயே தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து விலக திட்டமிட்ட உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...