7 2
இலங்கைசெய்திகள்

ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு

Share

ரணில் தொடர்பில் முடிவை மாற்றப் போகும் மகிந்த – அதிரடியாக வெளியான அறிவிப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன எடுத்துள்ள முடிவை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டால் முடிவை மாற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, “நாங்கள் கட்சியாக தனித்து செல்கிறோம், தனி வேட்பாளரை நிறுத்துகிறோம், ஆனால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுகிறோம்.

எங்களுடைய கட்சி எடுத்துள்ள முடிவை மீண்டும் மாற்றுமாறு கேட்டால் நாங்கள் அதனை செய்வோம். வெற்றி என்பதே எங்களுக்கு முக்கியமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறுகையில், “2015ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பலர் சென்றனர். சில பேருடன் எஞ்சியிருந்தோம். அந்த குழுவுடன் இணைந்து மிகப்பெரிய கட்சியை உருவாக்கி மகிந்த ராஜபக்சதலைமையில் தேர்தலிலும் வெற்றிபெற்றோம்.

இம்முறையும் அதுதான் நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுனவின் 19 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பிரதிநிதிகள் இதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், அறிவிப்பு விடுக்கப்பட்டபோதிலும் சில பொதுப் பிரதிநிதிகள் இதனைப் புறக்கணித்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஸ்தாபகரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என தெரியவந்தது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...