4 1
இலங்கைசெய்திகள்

மகிந்த தனது இல்லத்தை ஒப்படைக்க வேண்டும்: அநுர திட்டவட்டம்

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அதிகாரபூர்வ இல்லத்தை ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேவை ஏற்பட்டால் அவருக்கு வேறு ஓரு பொருத்தமான வீட்டை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அரசியல் வீண் விரயத்தை நிறுத்துமாறு கோரப்பட்டது. அதனை நாம் செய்துள்ளோம்.

தமது செலவுகளில் 50 வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு 30500 சதுர அடியில் பெரிய வீடு எதற்கு?

இந்த வீட்டை புனரமைப்பதற்காக 47 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செலவுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உசிதமானதல்ல.

வீட்டை ஒப்படைக்குமாறு கோரும் போது தம்மை வெளியே போடுவதாக மகிந்த கூறுகின்றார்.

மகிந்த தனது பத்தாண்டு கால ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் வங்கியில் வைப்பிலிடப்பட்ட சம்பளத்தை எடுத்ததில்லை.

மஹிந்தவின் புதல்வர் யோஷிதவும் கடற்படையில் பதவி வகித்த காலத்தில் சம்பளப் பணத்தை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்படியானால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தொகை சொத்துக்கள் இருக்க வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...