articles2FTC207I0V0Mwrh6Fetrpk
இலங்கைசெய்திகள்

டிட்வா புயல் நிவாரணம்: வயல் நிலங்களில் படிந்த மணலை அகற்ற மகாவலி சபை அனுமதி! 

Share

‘டிட்வா’ சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகார சபை ஏற்கனவே வழங்கியுள்ளதாகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினைக்குத் துரித தீர்வு காணும் நோக்கில், கீழ்க்காணும் மாவட்டங்களில் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட வயல்நிலங்களில் படிந்துள்ள மணலை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது:

பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம், குருநாகல்.

ஹுருலுவெவ, ரம்பக்கன் ஓயா மற்றும் அதனை அண்டிய வயல் நிலங்கள்.

குறித்த பயிர்ச்செய்கை நிலங்கள் அல்லது காணி உரிமையாளரின் மேட்டு நிலம் அல்லது அனுமதி பெறப்பட்ட வேறொரு காணிக்கு இலகு ரக போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி மணலைக் கொண்டு செல்லலாம்.

இதன்மூலம், நிலங்களை மீண்டும் தயார்படுத்திக்கொண்டு தேவையான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமில்லாத ஏனைய பயிர்ச்செய்கை நிலங்களில் தேங்கியுள்ள மணலை அகற்றி, அந்தப் பயிர்ச்செய்கை நிலத்தின் ஒரு பகுதியிலேயே களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு பணியகம் பிராந்திய அகழ்வுப் பொறியியலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் அகற்றப்பட்ட அந்த மணல் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுமாயின், அதற்கான முறையான அனுமதியை உரிய பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் GSMB குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...