articles2FTC207I0V0Mwrh6Fetrpk
இலங்கைசெய்திகள்

டிட்வா புயல் நிவாரணம்: வயல் நிலங்களில் படிந்த மணலை அகற்ற மகாவலி சபை அனுமதி! 

Share

‘டிட்வா’ சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகார சபை ஏற்கனவே வழங்கியுள்ளதாகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினைக்குத் துரித தீர்வு காணும் நோக்கில், கீழ்க்காணும் மாவட்டங்களில் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட வயல்நிலங்களில் படிந்துள்ள மணலை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது:

பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம், குருநாகல்.

ஹுருலுவெவ, ரம்பக்கன் ஓயா மற்றும் அதனை அண்டிய வயல் நிலங்கள்.

குறித்த பயிர்ச்செய்கை நிலங்கள் அல்லது காணி உரிமையாளரின் மேட்டு நிலம் அல்லது அனுமதி பெறப்பட்ட வேறொரு காணிக்கு இலகு ரக போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி மணலைக் கொண்டு செல்லலாம்.

இதன்மூலம், நிலங்களை மீண்டும் தயார்படுத்திக்கொண்டு தேவையான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமில்லாத ஏனைய பயிர்ச்செய்கை நிலங்களில் தேங்கியுள்ள மணலை அகற்றி, அந்தப் பயிர்ச்செய்கை நிலத்தின் ஒரு பகுதியிலேயே களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு பணியகம் பிராந்திய அகழ்வுப் பொறியியலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் அகற்றப்பட்ட அந்த மணல் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுமாயின், அதற்கான முறையான அனுமதியை உரிய பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் GSMB குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...