MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Share

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று புழல் சிறை நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த தனுக ரோஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், அவர் 2019 ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

30-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி வழக்குத் தொடர்ந்ததால், பழிவாங்கும் விதமாக அதிகாரிகள் தனிமைச் சிறைக்கு மாற்றி கொடுமைப்படுத்துவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களின் இன்ஹேலர்களைக்கூட அதிகாரிகள் பறித்துச் சென்றுவிட்டனர் என்றும், அவர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை என்றும் வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வு, மனுதாரருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று புழல் சிறைத் துறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

மேலும், இந்த மனுவுக்கு நவம்பர் 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

Share
தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...

25 68fde7b6a965a
செய்திகள்இலங்கை

இலங்கை மத்திய வங்கி கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்கள் மீது கணக்கெடுப்பு மற்றும் பதிவு கட்டாயம்

இலங்கை மத்திய வங்கி, தற்போதுள்ள கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதற்காக ஒரு கணக்கெடுப்பை...