3 1 11
இலங்கைசெய்திகள்

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை

Share

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை

தமிழ் மக்களின் விடிவுக்காக போராடிய மாவீரர்களின் துயிலும் இல்லத்தினை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் இம்முறை தமது உறவுகளை நினைவு கூருவதற்கான கெடுபிடிகள் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இன்றைய தினம் மட்டக்களப்பின் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அங்கு முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகளையும் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மாவீரர்களின் எண்ணங்களை மனதில் சுமந்தவாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் எண்ணத்துடன் பொதுமக்கள் மாவடி முன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

எமது மண்ணுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழர்கள் இந்த மண்ணில் நிம்மதியாக சுதந்திரக்காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தமது உயிரை அர்ப்பணித்த தியாகதன்மை கொண்ட போராளிகளை நாங்கள் என்றும் மறக்ககூடாது.

அவர்களை மறப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.

அந்த மாதம் என்பது தமிழர்களினைப் பொறுத்த வரையில் அந்த தியாகத்தினை நினைவுகூரும் மாதமாகவுள்ளது. அந்த வகையில் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் அவர்களின் நினைவினை சுமந்தவாறு நின்றுகொண்டிருக்கின்றோம்.

இதேபோன்று தாண்டியடி, தரவை, கண்டலடி போன்ற இடங்களிலும் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன. இதில் தாண்டியது துயிலும் இல்லம் விசேட அதிரடிப்படையினரின் முகாமாகவுள்ளது.

ஜனநாயக ஆட்சி நடக்கின்ற காலத்தில் துயிலும் இல்லத்தினை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து அதில் முகாம் அமைத்து சப்பாத்துகால்களின் கீழ் எமது உறவுகளின் சமாதியை தீண்டிக் கொண்டிருப்பது ஒரு அசிங்கமான செயற்பாடு.

முகாமிலிருந்து அவர்கள் அகற்றப்படவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். அகற்றுவோம் என்று சொன்னார்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

மாவடி முன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் உள்ளத்திலிருந்த கல்லறைகள் அகற்றப்பட்டிருந்தாலும் இம்முறை இங்கு ஓரளவு சுதந்திரமாக நினைவேந்தலை செய்யக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

ஒரு விடிவுக்காக போராடியவர்களை நாங்கள் மலினப்படுத்தாமல் அவர்களின் மகத்துவத்தினை நாங்கள் நெஞ்சில் சுமக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...