கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!
இலங்கைசெய்திகள்

கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!

Share

கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அன்று நாங்கள் நேசித்தோம். எவ்வாறாயினும் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிருப்தி அளித்தமையால் இயக்கத்தில் இருந்து விலகிக் கொண்டோம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைசி வரை போராடி மரணித்துப் போனார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல அழிவுகளையும், இழப்புக்களையும் நாம் சந்தித்திருக்கின்றோம்.

உண்மையில் அடைய முடியாத இலக்குகளுக்காக அழிந்து போயிருக்கின்றோம். எனவே அடைந்தவற்றையாவது இனி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டுமே தவிர பழைய புகழையே பாடுவதால் எந்தப் பயனும் இல்லை.

கடந்த காலங்களில் வன்முறை கலாசாரம் விரும்பியோ விரும்பாமலோ எமது சமூகத்திற்குள் திணிக்கப்பட்டது. இறுதியில் அது இயலாமையில் முடிந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் வன்முறைத் தலைவர்களைப் பற்றி சிந்திப்பது இனியும் பொருத்தமான விடயமே அல்ல. வன்முறைக்கான தேவைப்பாடு இனி மக்கள் மத்தியில் எழாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...