கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!
இலங்கைசெய்திகள்

கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!

Share

கடைசி வரை போராடி மரணித்த விடுதலைப் புலிகளின் தலைவர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அன்று நாங்கள் நேசித்தோம். எவ்வாறாயினும் அவரால் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிருப்தி அளித்தமையால் இயக்கத்தில் இருந்து விலகிக் கொண்டோம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடைசி வரை போராடி மரணித்துப் போனார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல அழிவுகளையும், இழப்புக்களையும் நாம் சந்தித்திருக்கின்றோம்.

உண்மையில் அடைய முடியாத இலக்குகளுக்காக அழிந்து போயிருக்கின்றோம். எனவே அடைந்தவற்றையாவது இனி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டுமே தவிர பழைய புகழையே பாடுவதால் எந்தப் பயனும் இல்லை.

கடந்த காலங்களில் வன்முறை கலாசாரம் விரும்பியோ விரும்பாமலோ எமது சமூகத்திற்குள் திணிக்கப்பட்டது. இறுதியில் அது இயலாமையில் முடிந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த அடிப்படையில் வன்முறைத் தலைவர்களைப் பற்றி சிந்திப்பது இனியும் பொருத்தமான விடயமே அல்ல. வன்முறைக்கான தேவைப்பாடு இனி மக்கள் மத்தியில் எழாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...