18 32
இலங்கைசெய்திகள்

பாகிஸ்தானில் டேங்கர் லாரி வெடித்து விபத்து : ஆறு பேர் பலி

Share

பாகிஸ்தானில் (Pakistan) எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்து ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது இன்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருயைில், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டம் ஹமித் புர் கனொரா பகுதியில் எரிவாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுள்ளது.

தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...