இலங்கைசெய்திகள்

தெஹிவளையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி

24 6630520838dea
Share

தெஹிவளையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி

வீடொன்றில் தனியாக வசித்து வந்த திருமணமாகாத வயோதிப சட்டத்தரணி ஒருவரை படுக்கையில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவளை – களுபோவில வீதி மற்றும் சில்வா குறுக்கு வீதியில் வசித்து வந்த 64 வயதான செபாலிகா சாந்தனி சதரசிங்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சட்டத்தரணி வீட்டில் தனியாக காலத்தை கழித்துள்ளதாகவும், அவரது சகோதரர் கனடாவில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரனை தொடர்ந்தும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ள அவர், கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி தொடர்புகொண்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கனடாவில் வசிக்கும் சகோதரர் மிரிஹானாவில் வசிக்கும் தனது நண்பரிடம் கூறியதையடுத்து கொஹுவல பொலிஸில் நேற்று 29 ஆம் திகதி மதியம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மர்மமான முறையில் சட்டத்தரணி படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...