24 6630520838dea
இலங்கைசெய்திகள்

தெஹிவளையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி

Share

தெஹிவளையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி

வீடொன்றில் தனியாக வசித்து வந்த திருமணமாகாத வயோதிப சட்டத்தரணி ஒருவரை படுக்கையில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிவளை – களுபோவில வீதி மற்றும் சில்வா குறுக்கு வீதியில் வசித்து வந்த 64 வயதான செபாலிகா சாந்தனி சதரசிங்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சட்டத்தரணி வீட்டில் தனியாக காலத்தை கழித்துள்ளதாகவும், அவரது சகோதரர் கனடாவில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சகோதரனை தொடர்ந்தும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ள அவர், கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி தொடர்புகொண்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கனடாவில் வசிக்கும் சகோதரர் மிரிஹானாவில் வசிக்கும் தனது நண்பரிடம் கூறியதையடுத்து கொஹுவல பொலிஸில் நேற்று 29 ஆம் திகதி மதியம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மர்மமான முறையில் சட்டத்தரணி படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...