tamilnib 1 scaled
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு நற்செய்தி

Share

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு நற்செய்தி

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவின் அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவினை பெற தகுதியுடை 14 இலட்சத்து 6,932 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இதன்படி, 8,775 மில்லியன் ரூபா கொடுப்பனவு வங்கிகளில் வைப்பலிடப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவுகள், நாளை (05) முதல் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு எதிர்காலத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...