காதலனால் ஏற்பட்ட கொடூரம்!
தன்னுடைய காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு பிரதேசத்தில் இருந்து காதலன் தப்பியோடியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றையதினம் கண்டி – பல்லேகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி சம்பவம் பல்லேகல பொலிஸ் பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#srilankaNews
Leave a comment