Untitled 1 81 scaled
இலங்கைசெய்திகள்

அடுத்த மாதம் திருமணம் – முன்னாள் காதலனிடம் அனுமதி கோரி சென்ற பெண்

Share

அடுத்த மாதம் திருமணம் – முன்னாள் காதலனிடம் அனுமதி கோரி சென்ற பெண்

புலத்சிங்கள பிரதேசத்தில் தனது மகள் காணாமல் போயுள்ளதாக தாய் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு எதிர்வரும் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் குறித்த பெண் தனது முன்னாள் காதலனிடம் திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி பெறுவதற்காக சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

புலத்சிங்கள பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதி அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞருடன் சில காலமாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். சிறிது காலத்தின் பின்னர் அந்த உறவை நிறுத்திய இளம்பெண் வேறு பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞனுடன் மீண்டும் காதல் உறவை ஆரம்பித்துள்ளார்.

அதன் பின்னர் இரு தரப்பு பெற்றோரின் ஆசிர்வாதத்தையும் பெற்று அடுத்த மாதம் திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், குறித்த பெண் தனது பழைய காதலனை சந்தித்து தனது திருமணத்திற்கு அனுமதி கோர சென்றுள்ளார். அங்கு அவர் அவருடன் மூன்று நாட்கள் கழித்தார்.

எவ்வாறாயினும், மேலதிக தகவல்களைக் கேட்டபோது, ​​நீண்ட விசாரணையின் பின்னர், பழைய காதலன் மற்றும் புதிய காதலன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, புதிய காதலன் பெண்ணை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததால் சம்பவம் சமரசம் செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...