நாட்டை வந்தடைந்து 10 நாட்களாக காத்திருக்கும் 2 மசகு எண்ணெய் கப்பல்களுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாமையால் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தினை இன்று முதல் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு போதியளவு அந்நியச் செலாவணி கிடைத்தவுடன் கடந்த 10 நாட்களாக காத்திருக்கு 100,000 MT ESPO மசகு எண்ணெய் சரக்கு இறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் பற்றாக்குறை இருக்காது எனவும் தெரிவித்தார். ஏனெனில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனைத்து தயாரிப்புகளின் போதுமான பங்குகளை கொண்டுள்ளது. மத்திய வங்கி சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான வாராந்த அந்நிய செலாவணி தேவைகளை கிடைக்கச் செய்துள்ளது.
#srilankanews
Leave a comment