கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் 18 வளைவு வீதி நேற்று (04) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாகவே குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தனர்.
சீரற்ற காலநிலை காரணமாக வீதியின் 13 மற்றும் 14 ஆவது வளைவுகளுக்கு இடையிலான பகுதியில் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், குறித்த வீதியின் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
இதன்படி அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
#SriLankaNews