12 19
இலங்கைசெய்திகள்

பழைய வேட்பு மனுவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்

Share

பழைய வேட்பு மனுவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்

பழைய வேட்பு மனுவின் பிரகாரமே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் நிதிநிலைமையைக் கருத்திற் கொண்டு பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் பொதுத் தேர்தலை அடுத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகின்றது.

முன்னைய வேட்புமனுக்கள் ரத்துச் செய்வது தொடர்பில் நாடாளுமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ இதுவரை எந்தவொாு தௌிவான முடிவும் எடுக்கப்படாத நிலையில், பழைய வேட்பு மனுக்களின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளது.

எனினும் குறித்த வேட்பு மனுவில் உள்ள வேட்பாளரொருவர் மரணித்திருக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக மாத்திரம் வேறு பதிலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...