1 8
இலங்கைசெய்திகள்

வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்..! சறுக்கிய ஆளும் கட்சி

Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளை பெற்று 3927 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, 2,258,480 வாக்குகளை பெற்று 1767 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, 954,517 வாக்குகளை பெற்று 742 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, 488,406 வாக்குகளை பெற்று 381 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி, 307,657 வாக்குகளை பெற்று 377 ஆசனங்களை பெற்றுள்ளது.

இதேவேளை, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சி, 5,740,179 மற்றும் 6,863,186 வாக்குகளை பெற்றிருந்தது.

எனினும், நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற தவறியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி பெற்றுக்கொண்ட வாக்கு எண்ணிக்கையை விட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகள் 12 இலட்சம் குறைவு ஆகும்.

மேலும், நாடளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட ஏறத்தாழ 24 இலட்சம் குறைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...