1 8
இலங்கைசெய்திகள்

வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்..! சறுக்கிய ஆளும் கட்சி

Share

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகளும் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளை பெற்று 3927 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, 2,258,480 வாக்குகளை பெற்று 1767 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, 954,517 வாக்குகளை பெற்று 742 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, 488,406 வாக்குகளை பெற்று 381 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி, 307,657 வாக்குகளை பெற்று 377 ஆசனங்களை பெற்றுள்ளது.

இதேவேளை, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சி, 5,740,179 மற்றும் 6,863,186 வாக்குகளை பெற்றிருந்தது.

எனினும், நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற தவறியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி பெற்றுக்கொண்ட வாக்கு எண்ணிக்கையை விட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகள் 12 இலட்சம் குறைவு ஆகும்.

மேலும், நாடளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட ஏறத்தாழ 24 இலட்சம் குறைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...