tamilni 375 scaled
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்

Share

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்குவதற்காக 40க்கும் மேற்பட்ட சட்டவிரோத நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களின் கடன் வட்டி வீதம் வருடாந்தம் 365 சதவீதம் எனவும், இலங்கை மத்திய வங்கி அல்லது பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று (23.11.2023) நடத்திய அந்த அமைப்பு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மற்றும் அதன் பிரதிநிதிகள் மற்றும் இணையவழி கொள்ளையினால் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊழலுக்கு எதிரான குரல் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேலதிக தகவல்களைத் தெரிவித்தார்.

“இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட நிதிச் சபை, இவ்வாறான சட்டவிரோத நிறுவனங்களை இயங்க அனுமதித்ததுடன், அவர்கள் மௌனமாக இருந்து என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிதி கடத்தல் அமைப்புகளின் குண்டர்களின் அச்சுறுத்தல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலையங்களில் நேரடியாக முறைப்பாடு செய்த போதிலும், இதுவரையில் அது தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சீனர்கள் கூட இந்த பணமோசடி நிறுவனங்களை அமைத்திருப்பதும் தெரியவந்துள்ளதென அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...