tamilni 375 scaled
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்

Share

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்குவதற்காக 40க்கும் மேற்பட்ட சட்டவிரோத நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களின் கடன் வட்டி வீதம் வருடாந்தம் 365 சதவீதம் எனவும், இலங்கை மத்திய வங்கி அல்லது பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று (23.11.2023) நடத்திய அந்த அமைப்பு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மற்றும் அதன் பிரதிநிதிகள் மற்றும் இணையவழி கொள்ளையினால் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊழலுக்கு எதிரான குரல் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேலதிக தகவல்களைத் தெரிவித்தார்.

“இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட நிதிச் சபை, இவ்வாறான சட்டவிரோத நிறுவனங்களை இயங்க அனுமதித்ததுடன், அவர்கள் மௌனமாக இருந்து என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிதி கடத்தல் அமைப்புகளின் குண்டர்களின் அச்சுறுத்தல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலையங்களில் நேரடியாக முறைப்பாடு செய்த போதிலும், இதுவரையில் அது தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சீனர்கள் கூட இந்த பணமோசடி நிறுவனங்களை அமைத்திருப்பதும் தெரியவந்துள்ளதென அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...