tamilni 375 scaled
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்

Share

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்குவதற்காக 40க்கும் மேற்பட்ட சட்டவிரோத நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களின் கடன் வட்டி வீதம் வருடாந்தம் 365 சதவீதம் எனவும், இலங்கை மத்திய வங்கி அல்லது பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று (23.11.2023) நடத்திய அந்த அமைப்பு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மற்றும் அதன் பிரதிநிதிகள் மற்றும் இணையவழி கொள்ளையினால் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊழலுக்கு எதிரான குரல் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேலதிக தகவல்களைத் தெரிவித்தார்.

“இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட நிதிச் சபை, இவ்வாறான சட்டவிரோத நிறுவனங்களை இயங்க அனுமதித்ததுடன், அவர்கள் மௌனமாக இருந்து என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிதி கடத்தல் அமைப்புகளின் குண்டர்களின் அச்சுறுத்தல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலையங்களில் நேரடியாக முறைப்பாடு செய்த போதிலும், இதுவரையில் அது தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சீனர்கள் கூட இந்த பணமோசடி நிறுவனங்களை அமைத்திருப்பதும் தெரியவந்துள்ளதென அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...