tamilni 375 scaled
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்

Share

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்குவதற்காக 40க்கும் மேற்பட்ட சட்டவிரோத நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களின் கடன் வட்டி வீதம் வருடாந்தம் 365 சதவீதம் எனவும், இலங்கை மத்திய வங்கி அல்லது பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று (23.11.2023) நடத்திய அந்த அமைப்பு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மற்றும் அதன் பிரதிநிதிகள் மற்றும் இணையவழி கொள்ளையினால் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊழலுக்கு எதிரான குரல் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மேலதிக தகவல்களைத் தெரிவித்தார்.

“இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட நிதிச் சபை, இவ்வாறான சட்டவிரோத நிறுவனங்களை இயங்க அனுமதித்ததுடன், அவர்கள் மௌனமாக இருந்து என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிதி கடத்தல் அமைப்புகளின் குண்டர்களின் அச்சுறுத்தல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலையங்களில் நேரடியாக முறைப்பாடு செய்த போதிலும், இதுவரையில் அது தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சீனர்கள் கூட இந்த பணமோசடி நிறுவனங்களை அமைத்திருப்பதும் தெரியவந்துள்ளதென அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...