24 66c98aa34e9dd 1
இலங்கை

ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியின் வீட்டில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

Share

ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியின் வீட்டில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

மத்துகம தம்பரட்டியவில் உள்ள ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வீட்டில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 22 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 125 மற்றும் 9 மி.மீ ரக துப்பாக்கி தோட்டாக்கள் 125 ஐ காவல்துறையினர் கைப்பற்றினர்.

துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, மத்துகம தம்பரடிய கமிட்டியின் ஓய்வுபெற்ற இராணுவ மேஜரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​வீட்டின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த உயிருள்ள தோட்டாக்களை கண்டுபிடிக்க முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை அதிகாரிகள் வீட்டை சோதனையிட்ட போது ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் வீட்டில் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...