24 66c98aa34e9dd 1
இலங்கை

ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியின் வீட்டில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

Share

ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியின் வீட்டில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

மத்துகம தம்பரட்டியவில் உள்ள ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வீட்டில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 22 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 125 மற்றும் 9 மி.மீ ரக துப்பாக்கி தோட்டாக்கள் 125 ஐ காவல்துறையினர் கைப்பற்றினர்.

துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, மத்துகம தம்பரடிய கமிட்டியின் ஓய்வுபெற்ற இராணுவ மேஜரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​வீட்டின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த உயிருள்ள தோட்டாக்களை கண்டுபிடிக்க முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை அதிகாரிகள் வீட்டை சோதனையிட்ட போது ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் வீட்டில் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...