tamilnig 18 scaled
இலங்கைசெய்திகள்

விக்டோரியா அணை மீது இலகுரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி

Share

விக்டோரியா அணை மீது இலகுரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஊடாக இலகுரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட அனுமதி வழங்கும் பிரேரணையொன்று கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மொரகஹமுல்லவுக்கும் அதிகாரிகமவுக்கும் இடையிலான போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அதற்கான அனுமதி மற்றும் இறுதித் தீர்மானத்தைப் பெறுவதற்காக பிரேரணையை மகாவெலிக்குப் பொறுப்பான அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக விக்டோரியா அணையின் மீது வாகனம் ஓட்டுவது நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டியுள்ளது.

விக்டோரியா அணையின் மீது வாகன போக்குவரத்து தற்போது மகாவலி அதிகாரசபை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கும் பாதுகாக்கப்பட்ட வலயத்திற்கும் இடையிலான பாதுகாப்புப் பணிகளே இதற்குக் காரணம்.

விக்டோரியா நீர்த்தேக்கம் விவசாயத்திற்கு நீர் பெறுதல், நீர் மின்சாரம் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மக்கள் அங்கு செல்ல முடியாதவாறு அணையை தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றியதன் மூலம் அங்கு குடியிருந்த ஆரம்ப குடியிருப்பாளர்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....