மீண்டும் எழுவோம்! – கூறுகிறார் நாமல்

namal 1

தவறுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் மக்களுக்காக எடுக்கப்பட்ட சில முடிவுகள் தவறானவையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாறை மாவட்டத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” மக்களைப் பற்றி சிந்தித்து எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் தவறானவையாகின. அந்தத் தவறுகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

உதாரணமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் 350 ரூபாவுக்கு மக்களுக்கு உரம் வழங்கினார். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ, உர இறக்குமதியை நிறுத்தி இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்த தீர்மானித்தாரெனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

#SriLankaNews

 

Exit mobile version