சிறுவர்களிடையே அதிகரிக்கும் தொழுநோய்

1674964083 1674959311 laduru

இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார்.

இன்று (29) அனுசரிக்கப்படும் உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை என வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version