இலங்கைசெய்திகள்

டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பாதாள உலக தலைவர்

24 665930c61f965
Share

டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பாதாள உலக தலைவர்

பாதாள உலக செயற்பாட்டாளரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் என கருதப்படும் நடுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவின் மைத்துனரான மிதிகம ருவன் இன்று அதிகாலை (31.06.2024) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் டுபாயில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ருவான் மிதிகமவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றிருந்தது.

டுபாயில் உள்ள இரவு விடுதியில் சண்டையில் ஈடுபட்டதாக கூறி உள்ளூர் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மிதிகம ருவன் மேலதிக விசாரணைகளுக்காக விசேட பாதுகாப்பின் கீழ் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஹரக் கட்டா தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும், மிதிகமவைச் சேர்ந்த ருவன், அவரை இரகசியப் பொலிஸாரின் பிடியில் இருந்து விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இரகசிய பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...