11 22
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்

Share

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்

மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் பதவியின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதிக்கு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், நல்லாட்சி யுகத்தை ஏற்படுத்துவதற்கும், தண்டனையில்லா கலாசாரத்தை மாற்றுவதற்கும், இலங்கை மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என தாங்கள் நம்புவதாகவும், சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இனம், மதம் மற்றும் பிற பிளவுபடுத்தும் அடையாளங்கள் பல ஆண்டுகளாக இலங்கை தாய்நாட்டை பாதிக்கின்றன.

இந்தநிலையில், இன வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படும் ஐக்கிய இலங்கைக்கான அடித்தளத்தை ஜனாதிபதி அமைப்பார் என நம்புவதாக சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...