12 2
இலங்கைசெய்திகள்

இந்தியாவிடம் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை

Share

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியா செய்த பரிந்துரையை நிராகரித்ததாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாருக்கும் திருகோணமலைக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மானத்திற்கும் எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த திட்டங்களுக்கு இணங்கியிருந்த போதிலும் தமது அரசாங்கம் இந்த யோசனைகளை நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது மற்றும் திருகோணமலை – மன்னார் அதிவேக நெடுஞ்சாலை என்பனவற்றினால் நாடு பிளவடையக் கூடிய நிலைமை ஏற்படக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் திருகோணமலை சக்தி வள திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் பொருளாதார நிலைமைகள் சமமானதாக காணப்பட்டால் பாலம் அமைப்பதில் பிரச்சினை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பாலம் அமைத்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நிலை சமமானதாக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...