12 2
இலங்கைசெய்திகள்

இந்தியாவிடம் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை

Share

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியா செய்த பரிந்துரையை நிராகரித்ததாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாருக்கும் திருகோணமலைக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மானத்திற்கும் எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த திட்டங்களுக்கு இணங்கியிருந்த போதிலும் தமது அரசாங்கம் இந்த யோசனைகளை நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது மற்றும் திருகோணமலை – மன்னார் அதிவேக நெடுஞ்சாலை என்பனவற்றினால் நாடு பிளவடையக் கூடிய நிலைமை ஏற்படக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் திருகோணமலை சக்தி வள திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் பொருளாதார நிலைமைகள் சமமானதாக காணப்பட்டால் பாலம் அமைப்பதில் பிரச்சினை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பாலம் அமைத்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நிலை சமமானதாக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
1770292452 lawyer 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சட்டத்தரணியின் லஞ்ச் பாக்ஸ் முதல் சொகுசு கார் வரை அம்பலமான உண்மைகள்!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா...

images 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜப்பானியத் தேர்தலில் ட்ரம்ப்பின் நேரடித் தலையீடு: பிரதமர் சனாயே டகாயிச்சிக்கு முழு ஆதரவு!

ஜப்பானில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 08) நடைபெறவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி...

Dr Harini Amarasuriyapng
செய்திகள்அரசியல்இலங்கை

ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய கடும் உத்தரவு!

பாடசாலைகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஸ்மார்ட் பலகைகளுக்காக (Smart Boards) பெற்றோரிடம் நிதி வசூலிப்பதைத் தற்காலிகமாக அல்ல,...

images 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கரம் பலகை ஊழல் வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகள் மீதான தீர்ப்பு மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு!

சதோச நிறுவனம் ஊடாக கரம் மற்றும் தாயக்கட்டைகளை இறக்குமதி செய்ததில் 3.9 மில்லியன் ரூபாய் அரச...