24 6653d84958634
இலங்கைசெய்திகள்

கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Share

கொழும்பு உட்பட ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் ஏழு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (27.05.2024) மாலை நான்கு மணி வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நிலை 02 எச்சரிக்கை விடுக்கப்பட்டது:

• கொழும்பு – சீதாவக பிரதேச செயலகப் பிரிவு (DSD) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• களுத்துறை – இங்கிரிய, புலத்சிங்கள மற்றும் மத்துகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• கேகாலை – புலத்கொஹுபிட்டிய, தெரணியகல, ருவன்வெல்ல, கேகாலை, தெஹியோவிட்ட, வரகாபொல, யட்டியந்தோட்டை, மாவனெல்ல மற்றும் கலிகமுவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• நுவரெலியா – அம்பகமுவ மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்

• இரத்தினபுரி – இம்புல்பே, பலாங்கொட, எலபாத, கலவான, கிரியெல்ல, எஹலியகொட, அயகம, இரத்தினபுரி மற்றும் குருவிட்ட மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

பின்வரும் பகுதிகளுக்கு நிலை 01 எச்சரிக்கை

• கொழும்பு – பாதுக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• கம்பஹா – அத்தனகல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• களுத்துறை – தொடங்கொட, வலல்லாவிட்ட, அகலவத்தை, பாலிந்தநுவர மற்றும் ஹொரண மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

• கண்டி – உடபலத மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் • கேகாலை – அரநாயக்க மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

• நுவரெலியா – கொத்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் • இரத்தினபுரி – நிவிதிகல, பெல்மடுல்ல, ஓபநாயக்க மற்றும் கஹவத்த மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...