newsss
இலங்கைசெய்திகள்

குருநகர் வாள்வெட்டு – அறுவர் சரணடைவு

Share

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த 6 பேர் இன்றைய தினம் பொலிஸாரிடம் சரண் அடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு வேளையில் நடத்தப்பட்ட இந்த வாள்வெட்டு சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

படுகாயமடைந்து உயிரிழந்த இளைஞனை திட்டமிட்டு தந்திரமாக அழைத்து வாள்வெட்டு நடத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கெமி என அழைக்கப்படும் குழுவினரே தமது மனைவி பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியிருந்தனர்.

இந்த நிலையில் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்கள் தலைமறைவாக முயன்றும் இனி தப்ப முடியாதென்ற நிலையில், சட்டத்தரணி ஒருவர் ஊடாக 6 பேர் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...

prison jail cell 2
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி சிறைச்சாலையில் இருந்து தப்ப முயன்ற கைதிகள்: அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் பரபரப்பு!

காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் இன்று தப்பியோட முயன்ற நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள்...