images 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு: நவம்பர் 17 அன்று அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

Share

மட்டக்களப்பு – குருக்கள்மடம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, நேற்று (ஒக்டோபர் 27) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் முடிவில், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கானது அதே நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து நீதவான் கவனம் செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து, இந்த வழக்குடன் தொடர்புடைய பங்காளர்கள் அனைவரும் நவம்பர் 17ஆம் திகதி பிற்பகல் 2:00 மணியளவில் நீதிமன்றுக்கு வருகை தந்து கலந்துரையாடலை மேற்கொண்டு ஒரு தெளிவான தீர்மானத்தை எடுப்பதற்காக நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக வழக்கு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான எஸ்.எச்.எம்.மனாறுதீன் மற்றும் முபாறக் மு.அஸ்ஸாம் உட்படப் பல சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

Share
தொடர்புடையது
images 1 8
செய்திகள்இலங்கை

வவுனியாவில் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணை ஆரம்பம்: வட்டி, போதைப்பொருள் விற்பனை மூலம் அபகரித்த சொத்துக்கள் இலக்கு!

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்த நபர்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து தற்போது வவுனியாவிலும் காவல்துறையினரால் விசாரணைகள்...

image 37812857b2
இலங்கைசெய்திகள்

வாகன விலைகள் ராக்கெட் வேகத்தில் உயரும்: 15% வரி தள்ளுபடி நீக்கப்படலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் வாகன இறக்குமதி விலைகள் வரம்புகளைத் தாண்டி அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்...

19sex 17509
செய்திகள்இலங்கை

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு: 9 மாதங்களில் 7,677 முறைப்பாடுகள் – பாலியல் அத்துமீறல்கள் 414 ஆக பதிவு

2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக 414...

b08a9d50370cb3acf536546f5c0646b0 1
செய்திகள்இலங்கை

இந்தியா-இலங்கை இடையே புதிய கப்பல் பாதை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து...