3 8
இலங்கைசெய்திகள்

வேலைக்குச் சென்ற பெண்ணை கழுத்தறுத்து படுகொலை செய்த மர்ம நபர்! அதிகாலையில் நேர்ந்த பரிதாபம்

Share

கொஸ்கம பகுதியில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்தப் பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கம பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்த படுகொலையை செய்த கொலையாளி தொடர்பில் தகவல்கள் எதும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அவிஸ்ஸாவெல்ல – புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண் ரப்பர் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும், இன்று அதிகாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Share
தொடர்புடையது
world 119
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு வழிபாட்டிற்காக நாளை இரவு முழுவதும் திறக்கப்படும் ருவன்வெலி மகா சேயா!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆசிகளைப் பெற வரும் பக்தர்களுக்காக, அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச்...

world 118
செய்திகள்உலகம்

போப் லியோவை கடுமையாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க அரசியலில் புதிய சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் லியோ மீது ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்...

world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...